வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (21:02 IST)

ஆயுள்தண்டனை கைதி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை

புதுச்சேரியில் ஆயுள்தண்டனை கைதி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்ட அனைவருக்கும் நீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பளித்துள்ளது.


 
 
புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி சுரேஷ்குமார் கடந்த 2010ஆம் ஆண்டு பரோலில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு வாசலில் இருந்த அவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன், சுந்தர், முரளி  உள்பட  10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேரி, குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை அளித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.