1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 22 அக்டோபர் 2016 (10:33 IST)

ஜெயலலிதா நலம்பெற சக்திவாய்ந்த கோயிலில் பூஜை செய்த கே.ஆர்.விஜயா!

ஜெயலலிதா நலம்பெற சக்திவாய்ந்த கோயிலில் பூஜை செய்த கே.ஆர்.விஜயா!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப பலரும் பிராத்தனை செய்து வருகின்றனர்.


 
 
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய சிறப்பு பூஜை செய்ததாக நடிகை கே.ஆர்.விஜயா கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள நாவலூரில் மீனாட்சியம்மாள் என்பவரது தோட்டத்தில் உள்ள எழிலரசி காமாட்சி அம்மன் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயிலில் முதலமைச்சருக்காக சிறப்பு பூஜை செய்தார்.
 
இது குறித்து கூறிய கே.ஆர்.விஜயா, அன்புள்ளமும்,எளிய குணங்களும் கொண்ட முதலமைச்சர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை விரைவில் குணமடைந்து, மீண்டும் பணிக்கு திரும்ப சக்தி வாய்ந்த நாவலுார் பெரியநாயகி, காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினேன். அவர் உடல்நிலை சீராகி விரைவில் திரும்புவார் என தெரிவித்தார்.