1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (17:50 IST)

கொள்ளிடம் ஆறு உடைப்பு: ஊருக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் பரிதவிப்பு!

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகத்தில் கனமழை பொழிந்து வருகிறது. தற்போது தமிழகத்தின் சில மாநிலங்களிலும் மழை இருக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
மழையால் அணைகள் நிறம்புவதால் கர்நாடகாவில் 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் 20 அடி உயரத்துக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 
மேலும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.70 லட்சம் கன அடியாக உள்ளது. இதனால் காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11 தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. 700க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அங்கு துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.