வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (19:12 IST)

கணவனை கொலை செய்ய கள்ளக்காதலுனுக்கு துணை போன மனைவி

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த மகேஸ்வரி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மதுவில் விஷம் வைத்தும், கத்தியால் குத்தி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்த 8ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு காமராஜர் நகரில் பிணமாக கிடந்தார். 
 
இந்த சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் அவருடைய மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், எனக்கும், நாகையை சேர்ந்த பிரசாந்த்துக்கும் கடந்த 2013ல் இருந்து கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் எனது கணவர் என்னை கண்டித்தார். எனினும், நான் கேட்க வில்லை மேலும் பிரசாந்த்தையும் கண்டித்தார். 
 
ஆனால், என்னடைய கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி அவருக்கு பிரசாந்த் பணம் கொடுத்து வந்து சரிசெய்து வந்துள்ளார். பின்னர், என்னுடைய வீட்டிற்கு அடிக்கடி பிரசாந்த் வர ஆரம்பித்தார். இதனால், அருகில் இருந்தவர்கள் என்னுடைய கணவரிடம் தெரிவித்தனர். மேலும் தவறாக பேசவும் ஆரம்பத்தினர்.
 
இந்நிலையில், என்னுடைய கணவர் ஒருநாள் பிரசாந்த்தை வீட்டிற்கு வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார். இந்த சம்பவம் எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இருவரும் சேர்ந்து என்னுடைய கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். 
 
இதையடுத்து, பிரசாந்த், ஒருநாள் என்னுடைய வீட்டில் அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு எனது கணவரை அழைத்துக்கொண்டு சென்று மதுவில் விஷம் கலந்து கொடுத்தார். அந்த மதுவை குடித்தும் அவர் இறக்கவில்லை. அப்போது, கத்தியால் அவரை குத்தி கொலை செய்தார். பின்னர், அவருடைய செல்போனை சுவீட்ச் ஆப் செய்ய சொன்னேன். பின்னர், அவர் தலைமறைவு ஆகிவிட்டார் என்று போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார்.
 
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் நேற்று போலீசார் அடைத்தனர்.