வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2017 (17:24 IST)

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த காஞ்சி சாமியார் கைது!

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த காஞ்சி சாமியார் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக கூறி போலி சாமியார் ஒருவரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.


 
 
கூடுவாஞ்சேரி அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக 59 வயதான அண்ணாதுரை என்கிற அண்ணாமலை ஸ்ரீதர் ஆஸ்ரமம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரிடம் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலாக இருக்கிறது என திருமணமான 24 வயதான பெண் ஒருவர் வந்துள்ளார்.
 
அந்த பெண்ணை தனிமையில் சந்தித்த சாமியார் விபூதி எல்லாம் கொடுத்து அந்த பெண்ணிடன் பாலியால் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். தனக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், தன்னிடம் உள்ள மந்திர சக்தியை வைத்து அந்த பெண்ணின் மகனின் கை, கால்கள் செயலிழக்க செய்வேன் எனவும், அடியாட்களை வைத்து அவரது கணவரை கொன்றுவிடுவேன் எனவும் சாமியார் மிரட்டியுள்ளார்.
 
இதனையடுத்து பயத்தில் இதனை வெளியில் யாரிடமும் கூறாமல் மனதிற்குள் வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை அவரது கணவர் உடனடியாக காப்பாற்றி விசாரித்த போது சாமியார் செய்த லீலைகளை கூறியுள்ளார்.
 
பின்னர் அந்த பெண்ணின் கணவர் அருகில் உள்ளவர்களிடம் சாமியாரின் சுயரூபத்திப்பற்றி கூறி நேற்று முன்தினம் இரவு சாமியார் தங்கியிருந்த இடத்திற்கு சென்று சாமியாரை சரமாரியாக அடித்தனர். பின்னர் அவரை கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரித்ததில் அவர், முன்னர் சைக்கிள் மெக்கானிக்காக இருந்ததும், போலி சாமியார் என்பதும் தெரியவந்தது.