செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (19:55 IST)

தீவிரவாதிகள் தாக்குதல்: காஷ்மீர் ஆளுனரின் ஆலோசகரை தொடர்பு கொண்ட கமல்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலால் 44 பாதுகாப்பு படையினர் பலியான அதிர்ச்சியில் இருந்து நாடே இன்னும் மீண்டு வராத நிலையில் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
 
இந்த நிலையில் காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தற்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
 
மேலும் நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம் என்றும், ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். 
 
மேலும் புல்வாமா தாக்குதலில் பலியான இரண்டு தமிழக சிபிஆர்எஃப் வீரர்களான சுப்பிரமணி மற்றும் சிவச்சந்திரனின் குடும்பத்தாரிடம் கமல்ஹாசன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.