வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: சனி, 19 ஜூலை 2014 (18:15 IST)

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஜெயலலிதா உத்தரவு

முதல் போக சாகுபடிக்காக, 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் முதல் போகப் பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் உள்ள நிலங்களுக்கு முதல் போக சாகுபடிக்காக 21.7.2014 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
 
இதனால், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.