வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 11 மே 2016 (18:14 IST)

வீதியில் இறங்கிய ஜெயலலிதா: ஒரே நாளில் சென்னையில் 15 தொகுதிகளில் பிரச்சாரம்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று சென்னையில் உள்ள 15 தொகுதிகளிலும் வீதி வீதியாக வேன் மூலம் சென்று பிரச்சாரம் செய்தார்.


 
 
சென்னையில் ஒரே நாளில் 15 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால் ஜெயலலிதா ஒவ்வொரு தொகுதிகளிலும் சில நிமிடங்களே பேசினார். சேப்பாக்கம் தொகுதியில் முதலில் பிரச்சாரத்தை ஆரம்பித்த ஜெயலலிதா ஓவ்வொரு கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்ற வார்த்தையை மறக்காமல் கூறினார்.
 
மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் வசந்தம் வீசுவதாகவும், வசந்தம் தொடர்ந்திட அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளதாகவும், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ அதிமுகவிற்கு மீண்டும் வாக்களிக்குமாறும் ஜெயலலிதா கூறினார்.
 
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்திற்காக பிற்பகல் 3 மணி அளவில் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவிற்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.