வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2016 (14:16 IST)

இன்று? நாளை? என்று? இழுபறியில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று என எதிர்பார்த்த நிலையில் தற்போது தீர்ப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.


 


 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், நேற்றும் மாலை வெளியான உச்ச நீதிமன்றம் வழக்கு பட்டியலில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து எதுவும் வெளியாகவில்லை.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் இன்றுவரை அவரது உடல்நிலை குறித்து சரியான தகவலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லை.
 
இந்நிலையில் உச்ச நீதிமன்றம், 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தசரா விடுமுறை காரணமாக விடுப்பு என்பதால் வருகிற 17ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு குறித்த தகவலை எதிர்பார்க்கலாம்.