தமிழகத்தில் 5 புதிய கோட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
5 புதிய வருவாய் கோட்டங்களை 110-விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவர் கூறியபோது,
5 புதிய வருவாய் கோட்டங்கள் மற்றும் 16 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிவித்தார். இதில் எழும்பூர் ,தண்டையார்பேட்டை,சாத்தூர் ,கோவை வடக்கு மேலூர் ஆகிய இடங்களில் 5 புதிய வருவாய் கோட்டங்கள் ஏற்படுத்தபடும் என்றார். மேலும் புதிய 16 வட்டங்களால் தமிழகத்தில் இருந்த 269 வட்டங்கள் இருந்து 285 ஆக உயர்ந்துள்ளது . மேலும் கிண்டியில் 100 கோடி செலவில் அடுக்குமாடி தொழில் வாளகம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார் .