வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (05:11 IST)

மு.க.ஸ்டாலின் இமேஜை கெடுக்க சதி: சொல்வது குஷ்பு

சென்னை மெட்ரோ ரயில் பயணத்தின் போது, சக பயணி ஒருவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறையவே இல்லை என்று நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து, திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் நேற்று மெட்ரோ ரயில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த சக பயணி ஒருவரை, அவர் கன்னத்தில் அறைந்ததாக சமுக வலை தளங்களில் வீடியோ பரவியது. இதனையடுத்து, இச்சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார்.
 
ஆனால், இச் சம்பவம் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கையில், மெட்ரோ ரயிலில், நான் பயணம் செய்யும் போது, சக பயணியை அறையவில்லை என மறுப்பு தெரிவித்தார்.
 
இந்நிலையில், இச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு ஒரு தனியார் தொலைக் காட்சியில் கருத்து தெரிவித்த போது, மெட்ரோ ரயில் பயணத்தின் போது சக பயணியை மு.க.ஸ்டாலின் அறையவில்லை, பின்னே செல்லுமாறுதான் கூறியுள்ளார். மு.க.ஸ்டாலினின் இமேஜை கெடுக்க சதி நடக்கிறது என உறுதிபட தெரிவித்துள்ளார்.
 
திமுகவில் நடிகை குஷ்பு இருந்த போது, அவருக்கும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே திடீர் மனக்சப்பு ஏற்பட்டது. அதை இந்த ஆதரவு வாக்குமூலம் மூலம் குஷ்பு சரிசெய்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.