வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (13:04 IST)

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ்க்கு 6 நாள் போலீஸ் காவல்: நீதிமன்றம் அனுமதி

ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராஜை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராஜன் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டு புழழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள செல்வ ராஜுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு பூந்தமல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.