வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (09:16 IST)

சென்னையில் இந்தியாவின் ஒரே ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற வீடு

இதுவரை நிறுவனங்கள், நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டுமே ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றிருப்பதை பார்த்திருப்பீர்கள். முதன்முதலாக சென்னையில் உள்ள வீடு ஒன்றுக்கு ஐஎஸ்.ஓ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்த வீடுதான் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற இந்தியாவின் ஒரே வீடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த வீடு பி.எஸ்.சுரானா மற்றும் அவரது மனைவி லீலாவதிக்கு சொந்தமானது. இந்த வீட்டில் இவர்களுடைய மகன் வினோத், மருமகள் ராஷ்மி ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் இவர்களுடைய வீட்டை ஐ.எஸ்.ஓ சமீபத்தில் அங்கீகரித்து சான்றிதழும் அளித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த வீட்டிற்கு வந்து வீட்டின் தரத்தை ஆராய்ந்து சான்றிதழை ஐஎஸ்.ஓ புதுப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.