1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2017 (19:31 IST)

ஓபிஎஸ்-க்கு சொந்தமாக ஒரு தீவு இருக்கு: போட்டுக்கொடுத்த விஜயபாஸ்கர்!

ஓபிஎஸ்-க்கு சொந்தமாக ஒரு தீவு இருக்கு: போட்டுக்கொடுத்த விஜயபாஸ்கர்!

கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக கூறியிருந்தனர்.


 

 
 
7-ம் தேதி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சேகர் ரெட்டி அளித்த தகவலினை வைத்து விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை நடத்தினர் வருமான வரித்துறை அதிகாரிகள். தேர்தலுக்கு செலவுகள் செய்த ஆவணங்களை தாருங்கள், சேகர் ரெட்டியிடம் எவ்வளவு கொடுத்துருக்கிங்க? என பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டனர் வருமான வரித்துறையினர்.
 
இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர், கேட்ட கேள்விக்கு உரிய பதிலை கூறாமல், சார் ஒபிஎஸ்ஸிடமும் பணம் கொடுத்துள்ளேன், ஒபிஎஸ் பணம்தான் சேகர் ரெட்டியிடம் இருக்கு. நத்தம் விசுவநாதன், ஒபிஎஸ், இருவரும் ஒரு தீவு வாங்கியிருக்காங்க சார் என்று போட்டுக்கொடுத்தார் விஜயபாஸ்கர். ஆனால் அதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஓபிஎஸ் பற்றி பேசாதீர்கள், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என கூறினர்.
 
வருமான வரித்துறையினரிடம் நிறைய ஆதாரங்கள் இருப்பதாகவும். மீண்டும் விஜயபாஸ்கரை வரவழைத்து வழக்கை அமலாக்க துறையினருக்கு மாற்றி அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.