வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 11 ஜூன் 2016 (08:14 IST)

"என்னிடம் பணம் வாங்கியவர் தானே ராமதாஸ்" - பாரிவேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டு

"என்னிடம் பணம் வாங்கியவர் தானே ராமதாஸ்" - பாரிவேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டு

என்னிடம் பணம் வாங்கியவர் தான் ராமதாஸ் என பாரிவேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 

 
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தன் மதன் காணாமல் போன விவகாரத்தில் எம்எஸ்ஆர்எம் கல்லூரியில் பல கோடி ரூபாய் மோசடி பண பரிவர்த்தனை விவகாரத்தில், பாரிவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மீதும் தனிப்பட்ட முறையில் என் மீதும் பல பொய்களை கோர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.
 
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்தில் சாதாரண டாக்டராக தொழில் செய்து வந்த ராமதாஸ், இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகவும் - பல்வேறு அறக்கட்டளைகளை நிர்வகிப்பவராகவும் இருப்பது எப்படி என்பதை கூறமுடியுமா?ஆயிரக்கணக்கான அப்பாவி வன்னியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட கல்லூரியை தன் குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்டார்.
 
அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இந்த போது, இந்தியா முழுக்க அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பல முறைகேடுகள் செய்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியாதா? பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்டு இன்றும் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார்.
 
தனது கல்லூரியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று டாக்டர் ராமதாஸ் எத்தனைமுறை தனது  கட்சிக்கார்கள் மூலம் என்னிடம் கைநீட்டினார் என்பது நினைவில் இல்லையா? என்று வெளுத்து வாங்கியுள்ளார்.