1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2016 (18:41 IST)

GST மற்றும் OMR சாலைகளில் பயணிக்க வேண்டாம்: டிஜிபி வேண்டுகோள்

வர்தா புயல் காரனமாக GST மற்றும் OMR சாலைகளில் பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
வர்தா புயல் காரனமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வர்தா புயல் முழுவதும் கரையை கடந்தது. சாலைகளில் உள்ள மரங்கள் விழுந்து சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், பொதுமக்கள் யாரும் வாகனங்களை மரத்தின் அடியில் நிறுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் GST மற்றும் OMR சாலைகளில் பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
 
திருவண்ணாமலைக்கு செல்ல விரும்புவோர் உள்ளூர் காவலர்களிடம் விசாரித்துவிட்டு செல்வது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.