வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2017 (08:52 IST)

நிரூபித்தால் விலகிக் கொள்கிறேன் - சத்குரு ஜக்கி வாசுதேவ் சீற்றம்

ஈஷா மையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அதிலிருந்து தான் விலகிக் கொள்வதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கோவையில் ஈஷா யோகா மையம் மஹா சிவாராத்திரியை முன்னிட்டு புதிய சிவன் சிலை திறக்கப்பட்டது. இந்த சிவன் சிலை காடுகளை அழித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. ஈஷா யோகா மையம் காடுகளை அழித்து கட்டப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. 
 
இந்நிலையில் பழங்குடியினர் பாதுகப்பு சங்க தலைவர், ஈஷா யோகா மையம் 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் இல்லாமல் கட்டுமானம் செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக நீதிமன்றம் தமிழக அரசிடம் பதில் அளிக்க கோரியது. இதற்கு பதில் மனு அளித்த தமிழக அரசு ஈஷா யோகா மையம் மீது புகார் தெரிவித்துள்ளது. 
 
ஈஷா யோகா மையம் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டியுள்ளது. விதிகளை மீறி கட்டிடங்களை கட்டி வருகிறது என தெரிவித்துள்ளது. மேலும் ஆதியோகி சிவன் சிலை அமைப்பு தொடர்பான ஆவனங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த விழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ் “ ஈஷா யோகா மையத்திற்கு எதிரக இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபித்தால் கூடா, நான் அனைத்திலும் இருந்து விலகிக் கொள்கிறேன். பலர் தங்களை சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களாக காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில், அவர்கள் சுற்றுச்சூழலுக்கு எதிராக செய்து வந்த பல நடவடிக்கைகளை நான் நிறுத்தினேன். அப்போதும் எனக்கு எதிராக ஊடகங்கள் செயல்பட்டன” என அவர் கருத்து தெரிவித்தார்.