1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 24 மே 2017 (15:33 IST)

நான் பிணமாகத்தான் வெளியே வருவேன்: யாராலும் தேற்ற முடியாத நிலையில் இளவரசி!

நான் பிணமாகத்தான் வெளியே வருவேன்: யாராலும் தேற்ற முடியாத நிலையில் இளவரசி!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், இளவரசியும் மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் இளவரசி தன்னை பார்க்க வருபவர்களிடம் அழுதுவிடுகிறாராம்.


 
 
சசிகலாவை சந்திக்க கட்சியினர், எம்எல்ஏக்கள் சிறைக்கு செல்கின்றனர். அவர்களிடம் சில அறிவுரைகளை கூறும் சசிகலா ஓரளவுக்குத்தான் தைரியமாக இருக்கிறாராம். இளவரசியை சந்திக்க அவரது குடும்ப உறவுகள் தான் வருகின்றன.
 
தன்னை சந்திக்க வரும் மகன் விவேக், பெண் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் சசிகலா அழுகிறாராம். தன்னை சுற்றி என்ன நடக்கிறது. எப்போது வெளியே வருவோம் என எதுவும் புரியாமல் மிகுந்த குழப்பத்தில் இளவரசி இருக்கிறாராம்.
 
மேலும் சிறையில் இருந்து நான் பிணமாகத்தான் வருவேன். ஒவ்வொரு நாளும் இங்கு நரகமாக இருக்கிறது. நான் என்ன தப்பு பண்ணினேன் என விவேக்கிடம் இளவரசி கதறி அழுததாக கூறப்படுகிறது. மேலும் அவங்களுக்கு சமைச்சுப் போட்டேன் அவங்க சொன்ன இடத்துல கையெழுத்து போட்டத்துக்கு இப்ப நான் அனுபவிச்சுட்டிருப்பதாகவும் இளவரசி கூறியதாக கூறப்படுகிறது.
 
இளவரசிக்கு எவ்வளவு ஆறுதல் கூறியும் அவரை தேற்ற முடியாமல் குடும்ப உறவுகள் தவிக்கிறார்கள். இரத்த அழுத்தமும் இளவரசிக்கு அதிகமாகி இரண்டு முறை சிறையில் மயங்கி விழுந்திருக்கிறார் அவர். அவரை வெளியே கொண்டு சென்று மருத்துவம் பார்க்கவும் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.