வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2017 (16:09 IST)

அதுவரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


 


தமிழக முதல்வர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

யாருடன் தொடர்பில் இருக்க வேண்டும், யாருடன் தொடர்பில் இருக்க கூடாது என ஜெயலலிதா எங்களுக்கு சுட்டி காட்டி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என அனைவரும் கூறினார்கள். சசிகலாவால் முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன்.

2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை, என்றார்.