வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 16 ஜூன் 2016 (17:01 IST)

’மக்களை சிரிக்கவைக்கும் நான் ஒரு நிமிடம் சிரிக்க முடியல’ - மதுரை முத்து உருக்கம்

நாள் ஒன்றுக்கு இரண்டு ஆயிரம் மக்களை சிரிக்கவைக்கும் நான் ஒரு நாள் கூட ஒரு நிமிடம் சிரிக்க முடியவில்லை நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து உருக்கமாக கூறியுள்ளார்.
 

 
இது குறித்து முகநூல் பதிவு கீழே:
 
அன்புள்ள நட்புக்காக,,,,,,,,
மனைவியிடம் அன்பு காட்டி வாழ்க.
 
8 ஆண்டுகளில் என் மனைவி இறந்த விடுவாள் என்று தெரியவில்லை, தெரிந்தால் என் அன்பை அதிகம் காட்டிஇருப்பேன். இன்னும் கொஞ்சி இருப்பயேன்.
 
இறப்பு எல்லாருக்கும் உண்டு என் மனைவிக்கு மட்டும் 30 வயதில் ஏன். சின்ன குழந்தை என்ன பாவம் செய்தது. இது கனவாக மாறும் என்று காத்துருந்தேன். ஒன்றையும் காணவில்லை.
 
என் சின்ன மகள் அம்மா பொருளை எல்லாம் சேர்த்து வைக்கிறாள், அம்மா வந்ததும் தருவாளாம் அம்மா விடம். என்ன செய்ய?,,,
 
ஒவ்வொரு நாளும் சாகலம் என்று இருக்கு எனக்கு. ஒரு விபத்தில் துக்கம் தாங்கமால் என் மனைவி இறந்து போனாள். ஆனால் என் மனைவிக்கு எதனையும் செய்யல பாவி நான்.
 
இந்த 2 குழந்தை இல்லை என்றால் எப்போது என் மனைவிடம் போயிருப்பேன்.
 
நாள் ஒன்றுக்கு இரண்டு ஆயிரம் மக்களை சிரிக்கவைக்கும் நான் ஒரு நாள் கூட ஒரு நிமிடம் சிரிக்க முடியல....
 
என் முதல் ரசிகை போய்விட்டாள். அழகிய மனைவி போய்விட்டாள். என் சந்தோசம், மகிழ்ச்சி எல்லாம் ......தொலைந்த்து.....
 
இவ்வளவு நாள் நண்பர்கள் ஆறுதலினால் ஓடியது வாழ்க்கை இனி........