வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 26 ஜூலை 2015 (04:16 IST)

மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் பேச்சு: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில், மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
திருமணம் தடைபடுவது, காதல் பிரச்சனை, ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கின் பேச்சுக்கு கடும் கண்டனத்திற்குரியது.
 
சோகம் மிகுந்த விவசாயிகள் தற்கொலையை இப்படி திசை திருப்பி விவசாயிகள் நலன் பற்றிய விஷயங்களை சிறுமைப்படுத்தி கிராமத்தில் நிலவும் துயரமான சூழலை மறைக்கும் முயற்சியாகவே இது உள்ளது. விவசாயிகள் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
 
இந்த வருட நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிதியை 5000 கோடி ரூபாய் குறைத்து விட்டு தங்க , வைர நகைகளுக்கு 75,592 கோடி ரூபாய் சுங்க வரி விலக்கு அளித்து, அரசு கஜானாவிற்கு நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது மத்திய அரசு.
 
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல் கார்ப்ரேட்டுகளுக்காகவே மத்திய அரசு செயல்படுகிறது என்பது தெளிவாகிவிட்டது என அதில் தெரிவித்துள்ளார்.