வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (12:24 IST)

பேஸ்புக் மூலம் இளம் பெண்கள் வேட்டை : கணவன் மனைவி கைது

பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து வந்த நபர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.


 

 
திருச்சி திருவெறும்பூர் எனும் ஊருக்கு அடுத்த நவல்பட்டு என்ற பகுதியியை சேர்ந்த ஒரு மாணவின் பெற்றோர், சமீபத்தில் அந்த பகுதி போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தனர். அதில், 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற தங்களின் மகள் இதுவரை வீடு திரும்பவில்லை என்று கூறியிருந்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர்.
 
இந்நிலையில், சில நாட்கள் கழித்து, அந்த மாணவி நாவல்பட்டு காவல் நிலையத்தில் ஆஜராகி, தன்னை ஒரு வாலிபர் ஏமாற்றி அழைத்து சென்று தன்னை கற்பழித்ததோடு, தான் அணிந்திருந்த 2 பவுன் நகையையும் பறித்துக் கொண்டார். அவருடன் ஒரு பெண்ணும் இருந்தார் என்று கூறி அவர்களின் புகைப்படத்தையும் கொடுத்து கதறி அழுதுள்ளார். அவரிடம் விசாரணை செய்த போலீசார் அவரின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.
 
அதன்பின், சம்பந்தப்பட்ட அந்த நபரையும், அவருடன் இருந்த பெண்ணையும் போலீசார் சென்னை, திருப்பூர், கோவை, வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு சென்று சாதாரண உடையில் தேடி வந்தனர். 
 
இந்நிலையில், சமீபத்தில் அந்த நபரும், அவருடன் இருந்த பெண்ணும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு அரசு பேருந்தில் இருந்து கீழே இறங்கியதை கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் குரு தீனதயாளன்(27) என்பதும், அவர் திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள நொச்சிப்பாளையம் அவரின் சொந்த ஊர் என்பதும் தெரியவந்தது. படித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லமாமல் இருந்த குரு, பொழுது போக்கிறகாக் பேஸ்புக்கில் நேரம் கழித்துள்ளார்.
 
அதன்மூலம், அவருக்கு அறிமுகமன பிரியதர்சினி (25) என்ற பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன்பின் உல்லாச வாழ்க்கைக்கும் , குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் ஆசைப்பட்ட அவர் பேஸ்புக் மூலம் இளம் பெண்களுக்கு வலை விரித்துள்ளார். இவரின் வலையின் சிக்கும் இளம் பெண்களை இவரின் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார். 
 
அவர்களிடம், என்னுடைய அக்கா உன்னை பிடித்திருக்கிறது என்று கூறினால்தான் உன்னை திருமனம் செய்வேன் என்று கூறி, வீட்டிலிருந்து நகைகளை அணிந்து வருமாறு கூறியுள்ளார்.
 
அப்படி வரும் பெண்களிடம், தன்னுடைய மனைவியை அக்கா என்று அறிமுகம் செய்துள்ளார். அந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து, அங்கு பெண்களை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கற்பழித்து, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவதை வாடிக்கையாக அவர்கள் வைத்திருந்தனர்.  இப்படி கிடைத்த நகைகளை விற்றுவிட்டு அவர்கள் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக தெரியவந்தது.
 
கல்லூரி மாணவிகள்  மட்டுமில்லாது, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வேலை தேடி அலையும் பெண்கள், வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வரும் பெண்கள் என ஒருவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
 
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.