வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (11:55 IST)

அதிமுக பிரமுகரின் மகன் கைது: வீட்டு வேலை செய்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை

மதுராந்தகம் அருகே வீட்டில் வேலை செய்த 13 வயது சிறுமிக்குப், பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக கிளைச் செயலாளரின் மகனை மேல்மருவத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
மதுராந்தகத்தை அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் துரைராஜின் வீட்டில் 13 வயது சிறுமி வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில், துரைராஜின் மகன்  37 வயதுடைய கோபிநாத், அந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
 
இது குறித்து அந்தச் சிறுமியின் தந்தை மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் கோபிநாத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.