வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (07:57 IST)

’திரையுலகில் சர்ச்சை’ - இயக்குனர் பாலாவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் சினிமா கதாசிரியர் ரத்னகுமார், ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில், அவரின் குற்றப்பரம்பரை கதையை இயக்குநர் பாலா, கதையாசிரியர் வேல.ராமமூர்த்தி, ஆகியோர் உள்ளிட்ட எவரும் படமாக எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி இருந்தார்.


 
 
மேலும், மனுவில் அவர் கூறியதாவது, “ இயக்குநர் பாரதிராஜாவுடன் பல படங்களுக்கு கதை எழுதி இருக்கிறேன், அப்போது,  பாரதிராஜாவுடன் உதவியாளராக இருந்த வேல.ராமமூர்த்தி என்பவர் என் ‘குற்றப்பரம்பரை’ கதையை  திருடிவிட்டார், அதை, இயக்குனர் பாலாவை வைத்து  வேறு பெயரில் படமாக்க உள்ளனர். குற்றப்பரம்பரை கதையை இயக்குநர் பாலா, கதையாசிரியர் வேல.ராமமூர்த்தி, ஆகியோர் உள்ளிட்ட எவரும் படமாக எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.”என்றார்.   

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இயக்குனர் பாலா, கதையாசியர் வேல.ராமமூர்த்தி ஆகியோர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.