கரூர் மாவட்டத்தில் திடீர் மழை : பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பல இடங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் 3 மி.மீட்டரும், மாயனூரில் 2 மி.மீட்டரும், கிருஷ்ணராயபுரம் 2 மி.மீட்டரும், கரூரில் 1.3 மி.மீட்டரும் மழை பதிவாகின.
இதே போல் க.பரமத்தி பகுதியில் 2 மி.மீட்டர் என்று கரூர் மாவட்டத்தில் மொத்தம் 10.3 மி.மீட்டர் மழையும், 0.8 மி.மீட்டர் சதவிகிதமாகவும் பதிவாகின.
மேலும் செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாந்தோன்றிமலை, காந்திகிராமம், புலியூர், மண்மங்கலம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் திடீரென்று பலத்தகாற்றுடன் கூடிய மழை பெய்தது.
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்