வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2016 (17:03 IST)

மதுரை அருகே அரசு பேருந்துடன் லாரி மோதி பயங்கர விபத்து: 10 பேர் பலி

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே சுப்புலாபுரத்தில் அரசு பேருந்துடன் சிமெண்ட் லாரி நேருக்கு நேராக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.


 
நெல்லையில் இருந்து குமுளி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று மதுரை அருகே சிமெண்ட் லாரி ஒன்றுடன் மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 
இன்று மதியம் 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்தும், லாரியும் மிக பயங்கரமாக நேருக்கு நேர் மோதியதால், பலி எண்ணிக்கை உயர வாய்புள்ளதாக கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விபத்தில் சிக்கிய பயணிகள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் தீயனைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்ன என்ற உடனடியாக தெரியவில்லை.