1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (11:29 IST)

முட்புதர்களில் கிடந்த 500 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளின் உதிரிபாகங்கள்: திருச்சியில் பரபரப்பு

திருச்சி  நவல்பட்டு பகுதியில் முட்புதர்களுக்குள் சிதறி கிடந்த, துப்பாக்கிகளின் உதிரிபாகங்களை கால்துறையினர் ககைப்பற்றியுள்ளனர்.
 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள நவல்பட்டு பகுதியில் முட்புதர்களுக்குள் ஏராளமான துப்பாக்கிகளின் உதிரிபாகங்கள் சிதறி கிடப்பதாக நவல்பட்டு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்றனர். நவல்பட்டு துப்பாக்கி தொழிற்சாலை பின்புறமுள்ள முட்புதர் உள்பட 6 இடங்களில் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் கைப்பிடி உதிரிபாகங்கள் சிதறி கிடந்தன.
 
அந்த கைப்பிடிகளின் எண்ணிக்கை 500 க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவை அனைத்தும் துருப்பிடித்த நிலையில் கிடந்தன. இதனால் அவை, பயன்படுத்தப்படாத துப்பாக்கிகளின் கைப்பிடிகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அங்கு துப்பாக்கி தொழிற்சாலை உள்ளதால் அங்கிருந்து வெளியில் வீசப்பட்ட கழிவு துப்பாக்கிகளின் கைப்பிடி கழிவுகாளாக  இருக்கலாம் என்று  கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.