1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (11:32 IST)

அதிமுக பிரமுகர் மீது வெடிகுண்டு வீசி கொலை வெறி தாக்குதல்

செங்கல்பட்டு அருகே அதிமுக பிரமுகர் மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில், அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


 
 
செங்கல்பட்டு, வல்லம் பகுதியைச் சேர்ந்த அருள் என்பவர் அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவர் தற்போது, காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட நேற்று விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு அவர் இருசக்கரவாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்த மர்மநபர்கள், அவர் மீது நாட்டுவெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார், அப்போது, மர்மநபர்கள் அரிவாளால் சரமாறியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். 
 
இதனைத்தொடர்ந்து, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, செங்கப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் வாகனச் சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் யார்? எந்த காரணத்திற்காக கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து அப்பகுதி அதிமுக பிரமுகர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.