1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 22 டிசம்பர் 2014 (19:44 IST)

கிரானைட் முறைகேடு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சகாயத்துக்கு 8 வாரம் அவகாசம்

கிரானைட் முறைகேடு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் 8 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
 
கிரானைட் முறைகேடு குறித்து இன்று அறிக்கை தர ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 8 வாரம் அவகாசம் வழங்கக் கோரி சகாயம் மனுத்தாக்கல் செய்திருந்தார். சகாயம் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.