1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (01:45 IST)

சரக்கு பாட்டிலில் பூச்சி - குடிமகன்கள் அதிர்ச்சி

சரக்கு பாட்டிலில் பூச்சி - குடிமகன்கள் அதிர்ச்சி

அரசு டாஸ்மாக் கடையில் விற்பனை செய்த மது பாட்டிலில் பூச்சிகள் இருப்பதைக் கண்டு குடிமகன்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 

 
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள 10229 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், ஒருவர் மது வாங்கியுள்ளார். அப்போது, அதில் பூச்சிகள் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனநால், அந்த மது பாட்டிலுக்கு பில் தருமாறு கடை ஊழியர்களிடம் அந்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார். 
ஆனால் கடைக்காரர் தரமறுத்து விட்டாராம்.
 
மதுவில் தற்போது பூச்சி மட்டும் தான் இருக்கு. ஒரு காலத்தில் பாம்பே வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கு இல்லை. குடிமகன்களே.. குடிமகன்களே... உஷார்.