வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By அபிமுகதீசு
Last Updated : ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (08:17 IST)

ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

சேலம் மாவட்டம் விரகனூர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.


 

 
தீபாவளியை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் ஜவுளி கடைகள் மற்றும் சந்தைகளில் விற்பனை அமோகமாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. தீபாவளி அன்று பெரும்பாலானோர் வீடுகளில் இறைச்சி சமைப்பது வழக்கம்.
 
இந்நிலையில் சேலம் மாவட்டம் விரகனூர் சந்தை, சனிக்கிழமை சந்தை என்பதால் தீபாவளில் முன்னிட்டு ஆயிரக்கணக்கில் ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.
 
ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரூ.600 முதல் ரூ.10,000 வரை ஆடுகள் விற்கப்பட்டுள்ளன. இது விபாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.