1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (15:10 IST)

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தந்தை , அண்ணனை தொடர்ந்து திமுக பிரமுகர் கைது

சில நாட்களுக்கு முன்பு  சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டியின் மகளை அவரது தந்தை , மகன் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் அத்தை சிவகங்கை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் முத்துப்பாண்டி, அவருடைய மகன் கார்த்திக் ஆகியோரை சிவகங்கை போலீஸார் கைது செய்தனர்.
 
இந்த விவகாரம் பற்றி, சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்கணிப்பாளர் துறை  உத்தரவில்  மகளிர் போலீசாரும், குழந்தைகள் நலக் குழுவினரும் பாலியில் பதிப்புக்குள்ளன சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர் அந்த விசாரணையில் அந்த சிறுமிக்கு  தன்னுடைய வீட்டு பகுதியில் இருந்த பலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
 
இந்நிலையில், போலீசார் சிவகங்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அந்த சிறுமியை ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் அந்த சிறுமி சென்னையில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
பின்னர், சிறுமி அளித்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சிவகங்கை நகர போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் உள்பட 4 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய பலரை கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்கணிப்பாளர் துரை உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய பரலரை கைது செய்து வருகின்றனர். 
 
இதனை தொடர்ந்து இன்று சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த சிவகங்கை நகர தி.மு.க. பிரமுகர் முத்துராக்கு என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்யப்பட்டார். கைதான திமுக பிரமுகரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 
சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த மற்ற சிவகங்கை பிரமுகர்கள் மற்றும் போலீஸார் விரைவில் கைதாகும் நிலையில் இருப்பதால் அப்பகுதி பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.