வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2015 (16:29 IST)

சகாயத்தை கூலிப்படை வைத்து கொல்ல சதி?: திருச்சி சிறைக்குள் சதித்திட்டம்?

கிரானைட் முறைகேடுகளை விசாரித்துவரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படை வைத்து கொலை செய்ய, திருச்சி சிறையில் கைதிகள் பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலும் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில்தான் சகாயத்தை கூலிப்படை வைத்து கொலை செய்யப் போவதாக திருச்சி மத்திய சிறைக்குள் கைதிகள் பேசிக் கொண்டதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.