வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (09:10 IST)

சசிகலா புஷ்பாவுடன் சேர்ந்து குடித்து கும்மாளம் அடித்த முன்னாள் அமைச்சர்: இளம்பெண்கள் புகார்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர் அவரது வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்கள் பானுமதி ஜான்சிராணி.


 
 
தூத்துக்குடி காவல்கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் சசிகலா புஷ்பாவுடன் சேர்ந்து முன்னாள் கல்வி அமைச்சர் பழனியப்பனும் குடித்து கும்மாளம் அடித்ததாக பரபரப்பு புகார்களை கூறினார்கள்.
 
சசிகலா புஷ்பா தங்களை குடிபோதையில் துன்புறுத்தியதாக கூறிய அவர்கள், கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனும் அவரது வீட்டுக்கு வருவார் என கூறினர். பழனியப்பன் வந்தவுடன் எங்களை வெளியே நிக்க சொல்லுவாங்க.
 
அவர்கள் இருவரும் படுக்கையறைக்கு செல்வார்கள், அவங்களுக்கு உணவு, டிரங்ஸ் எல்லாம் எடுத்து வைப்போம். அவர்கள் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு அலைவாங்க. மேலும் சசிகலா புஷ்பாவின் சென்னை, தூத்துக்குடி வீடுகளுக்கு பழனியப்பன் வந்திருக்கிறார் என அந்த பெண்கள் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்தனர்.