வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (21:52 IST)

ஏரோபிக்ஸ் விளையாட்டு போட்டிகளுக்கு...சிறப்பு பயிற்சி

தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் விளையாட்டு போட்டிகளுக்கு கரூர் பரணி வித்யாலாயா பள்ளி தேர்வு – வரும் 1 ம் தேதி தேசிய அளவில் பங்கேற்க பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது ஆக்ஸிஜன் ஏற்ற உடற்பயிற்சி உங்கள் இதய செயல்பாட்டிற்கு பெரிதும் உதவு கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூற்றுப்படி வாரத்திற்கு 5 முதல் 7 நாட்கள் குறைந்தது 30 நிமிடங் களாவது இதயத்திற்கான உடற்பயிற்சியை மேற்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த ஏரோபிக்ஸ் விளையாட்டில் கரூர் பரணி பார்க் பள்ளிக்குழுமம் முழுக்கவனம் செலுத்தி வருகின்றது கரூர் பரணி பார்க் பள்ளிகுழுமம், இந்த விளையாட்டில் கடந்த 4 வருடங்களாக முழுத்தேர்ச்சி வரும் நிலையில் வரும் டிசம்பர் மாதம் 1 ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டிகளுக்கு மாநில அளவில் கரூர் பரணி பார்க் கல்விக்குழும அணி தேர்வு பெற்றதையடுத்து முழு வீச்சில் தற்போது பள்ளியின் வளாகத்தில் சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

கரூர் மாவட்டத்திலேயே ஏரோபிக்ஸ் போட்டிகளில் தனிக்கவனம் செலுத்தி வருவது இப்பள்ளி தான் என்பது குறிப்பிடத்தக்கது.