வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 10 ஜூலை 2016 (12:37 IST)

தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை விலியுறுத்தி, தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
 

 
தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், மற்ற மீனவர்களைப் போல கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால்,  தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
எனவே, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.