மீனவர்கள்மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தத்தான் செய்யும்: எச்.ராஜா
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இலங்கை அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக தமிழக மீனவர்கள் செயல்பட்டால், அவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்ததான் செய்யும்.
என்று சர்ச்கைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்தால் தமிழக மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக தரப்பில் இத்தகைய கருத்துக்களைக் கூறியிருப்பது பல்வேறு தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.