1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 15 டிசம்பர் 2014 (15:44 IST)

முதலிரவு அன்று கண்ணீருடன் நின்ற மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்

திருச்சியில், தாலி கட்டிய முதலிரவு அன்று கண்ணீருடன் வந்த மனைவியை காதலனுடன் கணவர் சேர்த்து வைத்துள்ளார்.
 
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கடந்த 10ஆம் தேதி அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த இளம் ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் மற்றும் அதன் பிறகு நடக்கக்கூடிய திருமண வைபோகங்கள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளன.
 
பினார், அன்று இரவு புது மாப்பிள்ளை தனது முதலிரவிற்காக காத்திருந்தார். ஆனால் மணப்பெண், தான் வேறொருவரைக் காதலிப்பதாகவும், ’வாழ்ந்தால் அவருடன் வாழ்வேன்... இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்றும் கூறியுள்ளார்.
 
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த மணமகன், ‘‘திருமணம் நடந்து முதிந்த பிறகு சொல்கிறாயே? நிச்சயதார்த்தம் முடிந்த பிறகாவது சொல்லிருக்கலாமே?’’ என்று கேட்டு வருத்தமடைந்துள்ளார்.
 
ஆனாலும் அவர், தனது உறவினர்களை அழைத்து மணமகளின் காதல் விவகாரம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து காதலனை அழைத்து வந்து, பிறகு அருகில் உள்ள ஒரு கோவிலில் மணமகளுக்கும் அவருடைய காதலனுக்கும் இடையே திருமணம் நடைபெற்று முடிந்தது.