வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2016 (14:59 IST)

விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்திற்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணி ஆதரவு

விவசாய சங்கம் அறிவித்துள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணி ஆதரவு தரும் என்று மதிமுக பொதுச் செயலளர் வைகோ தெரிவித்துள்ளார்.


 

 
தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி பாலனின் டிராக்டர் ஜப்தி செய்ததையும், ஜப்தி நடவடிக்கையால் விவசாயி அழகரி தற்கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
 
இந்த போராட்டத்திற்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணி ஆதரவு கொடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.