வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2018 (14:44 IST)

வறட்சியில் இருந்து பயிர்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

வறட்சியில் இருந்து பயிர்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்
 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில்  வறட்சியில் சிக்கிய பயிர்களைக் காப்பாற்ற டேங்கர் லாரிகள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
 
குறுவை, சம்பா சாகுபடியை நம்பி ஏராளமான காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றி வருகிறது, மேட்டூர் அணை முறையாக திறந்துவிடப்படவில்லை.
 
தமிழக விவசாயிகளின் தேவைக்கு 264 டிஎம்சி நீரை தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் காவிரி நதிநீர் வழக்கில் இன்று இறுதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு 177.25 டிம்சி நீரை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 
 
இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிகள் 800 முதல் 1500 ரூபாய் வரை செலவு செய்து டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் கொண்டுவந்து பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர் விவசாயிகள்.