வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (11:48 IST)

கருக்கலைப்புக்குச் சென்ற மாணவியை ஆபாச படம் எடுத்த டாக்டர்; கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

கருக்கலைப்பு செய்ய சென்ற பிளஸ்-2 மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்த போலி டாக்டரும், கர்பமாக்கிய காதலனும் கைது செய்யப்பட்டனர்.
 

 
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஆரியூரை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 படிககும் மாணவியை, உமையாள்புரத்தை சேர்ந்த 22 வயது இளைஞன் ரகுபதி, காதல் என்ற பெயரில், அந்த மாணவியை கர்பமாக்கியுள்ளார்.
 
மாணவி, கர்பமானதை தன் காதலனிடம் தெரிவித்தார். கருக்கலைப்பு செய்ய ரகுபதி தன் நண்பர் நவாப்பிடம் கூறி, அந்த மாணவி 10 நாடகளுக்கு முன்பு நவாப் மருந்து கடைக்குச் சென்று கருக்கலைப்பு ஊசி போட்டு மருந்து வாங்கி வந்துள்ளார்.
 
2 நாட்களுக்கு முன் வயிற்று வலி என்று மீண்டும் நவாப் மருந்து கடைக்குச் சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு மயக்க ஊசி போட்டு, ஆபாச படம் பிடித்துள்ளார். மருந்து வாங்கி வருவதாக கூறிச் சென்ற மாணவியை காணவில்லை என்று நவாப்பின் மருந்து கடைக்கு தேடிச் சென்ற உறவினர்கள், மயக்க நிலையில் இருந்த மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
 
மருந்து கடைக்குச் சென்று ஊறவினர்கள், நவாப்பிடம் விசாரித்த போது செல்போனிலும் மாணவியை ஆபாசமாக படம் பிடித்தது தெரியவந்தவுடன், நவாப்பின் மருந்துகடையை அடித்து உடைத்து, மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்தனர்.
 
தகவல் அறிந்த ஏத்தாப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவாப்பை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் நவாப் மற்றும் காதலன் ரகுபதி ஆகியோரை கைது செய்தனர்.