1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 30 டிசம்பர் 2017 (16:40 IST)

முதல்ல நீங்க இருக்கீங்களான்னு பாருங்க - தினகரனை விளாசிய எடப்பாடி

இன்னும் மூன்று மாதத்தில் ஆட்சி கலையும் என்று கூறிய தினகரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.

 
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற தினகனுக்கு, இன்று காலை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற எனக்கு வாக்களியுங்கள் என ஆர்.கே.நகர் மக்களிடம் கோரிக்கை வைத்தேன். அதை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.  
 
அதிமுகவிற்கு ரத்தமும், சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கும் 5 பேரின் சுயநலத்தால் அதிமுகவிற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது அவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல், அரசியலில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். 
 
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். இவர்களின் ஆட்சி இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே தொடரும்” என தினகரன் கூறினார்.
 
இந்நிலையில், ஊட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி  “எங்களிடம் ஸ்லீப்பர் செல்கள் இல்லை. மாறாக பத்திரை மாதத்து தங்கங்கள். அவர்கள் தூரோகத்திற்கு அடிபணிய மாட்டார்கள். குறுக்கு வழியில் வந்தவர் தினகரன். ஹவாலா ஃபார்முலாவின் அவர் வெற்றி பெற்றுள்ளார். 3 மாதத்தில் ஆட்சி இருக்காது எனக் கூறி வருகிறீர்கள். முதலில் நீங்கள் இருக்கிறார்களா இல்லையா எனப் பார்ப்போம்”எனக்கூறினார்.
 
அதேபோல், அவருக்கு முன்னால் பேசியா ஓபிஎஸ் “கட்சிக்காக எத்தனை பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்பது தினகரனுக்கு தெரியாது. அவர்தான் என்னை ஜெ.விடம் அறிமுகப்படுத்தியதாக கூறி வருகிறார். அதில் உண்மையில்லை. அவர் 1999ம் ஆண்டுதான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆனால், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நான் பெரியகுளம் தொகுதியில் வார்டு பிரதிநிதியாக இருந்தேன்.
 
ஜெ.விற்கு எதிராக தினகரன் சதி செய்தார். அதனால், அவரை பெரியகுளம் தொகுதிக்குள் நுழையக்கூடாது என ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால், சசிகலாவை பாவம் பார்த்து ஜெ. வைத்துக் கொண்டார். எனக்கு 19 வயது இருக்கும் போது தினகரன் எல்.கே.ஜி படித்துக் கொண்டிருந்தார். தற்போது துரோகம் செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இனிமேல் நாங்கள் கவனமாக இருப்போம்” எனக் கூறினார்.