செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 7 மே 2015 (12:12 IST)

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி: விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு செயல்படுத்தப்படுகிறது என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.  
 
இது குறித்து, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 
 
அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-  
 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.
 
அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உடனே, முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை துவங் வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 
 
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகிறது என்பதை சுவரொட்டிகள் மூலமும், ஊர்வலங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.