வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (13:54 IST)

ஆவிகளிடம் கருத்து கணிப்பு; திமுகவுக்கே வெற்றி : இந்த வீடியோ பாருங்க

ஆவிகளிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், வருகிற சட்ட சபை தேர்தலில் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 


 

 
என்னடா இது என்கிறீர்களா?.. ஆச்சரியப்படாதீர்கள்.. ஆவிகளுடன் பேசும் ரமணி என்பவர்தான் இந்த கருத்து கணிப்பை நடத்தியுள்ளார்.
 
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர்தான் இந்த ரமணி. அவர் அந்த பகுதியில் அருள்வாக்கு, ஜோதிடம் கூறி வருகிறார். அது போதாது என்று அவர் ஆவிகளுடனும் பேசுவாராம். அவருடன் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி வீடியோவாக வெளி வந்துள்ளது.
 
அதை பார்த்தால் நிச்சயம் உங்களால் சிரிக்க முடியாமல் இருக்க முடியாது. முதலில் இறந்து போன பெண் ஆவியிடம் பேசுவதாக கூறுகிறார். அவரை பேட்டி எடுப்பவர் கேள்வி கேட்க, அவரே அந்த பெண் போல பேசுகிறார் ( கொஞ்சம் குரலை மாற்றி). அதன் பின் எம்.ஜி.ஆர் ஆவி தனக்குள் வந்தது போல் பேசுகிறார். எம்ஜிஆரும் (அவருதான்) திமுகவே வெற்றி பெறும் என்று கூறுகிறார். 
 
அடுத்தது அண்ணா என ரவுண்டி கட்டி அடிக்கிறார். ஒவ்வொரு முறை ஆவியுடன் பேசி முடித்து விட்டு, அந்த ஆவி அவரை விட்டு வெளியேறுவது போலவும், அப்போது சுவற்றில் சாய்ந்து மயக்கம் வருவது போலவும் கிடக்கிறார். அதன்பின் திடீரென விழிப்பு வருகிறது.. இப்படி நிறைய...
 
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்...
 

நன்றி : விகடன்