1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2015 (08:28 IST)

அமைச்சருக்கு எதிரான பேச்சு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து அவதூறு தகவல் தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அமைச்சர் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
கடந்த மாதம் 23 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில், சுகாதாரத் துறை அதிகாரி அறிவொளி தற்கொலை குறித்து அந்தத் துறை அமைச்சருக்கு எதிராக இளங்கோவன் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால், இளங்கோவன் மீது அவதூறு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரந்துள்ளார்.