1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (20:44 IST)

”எப்படி இருந்த காங்கிரஸ், திமுகவோடு சேர்ந்து இப்படி ஆகிவிட்டது”.. முதல்வர் பளார்

பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து பரிதாப நிலைக்கு வந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில் “பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்து பரிதாப நிலைக்கு வந்துவிட்டது, காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் பாவமாக உள்ளது” என விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “திமுக எந்த காலத்திலும் கூட்டணி கட்சிகளை மதித்தது கிடையாது” எனவும் கூறியுள்ளார்.