வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2020 (21:08 IST)

ஊரடங்கின் போது ’’டிக் டாக்’’ வீடியோ வெளியிட்டு மக்கள் மகிழ்ச்சி !

சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வரையில் இந்திய அரசு ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், மாணவர்களும், தொழிலாளர்களும் வீட்டில் உள்ளனர்.

சிலருக்கு அன்றைய தினத்தை பொழுதுபோக்க படிப்பும் , எஃப்.எம்பும் கைகொடுக்கிறது. சிலர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கின்றனர். சிலர், சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். ஊரடங்கு உத்தரவு உள்ள 21 நாட்களுக்கு பேஸ்பு, வாட்ஸ் ஆப் , இன்ஸ்டாகிராம், டிக் டாக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அவற்றின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,வீட்டில் தனிமையில் இருபோர், விதவிதமான டிக் டாக் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.