செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 26 அக்டோபர் 2016 (21:07 IST)

நெல்லையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி இளைஞர் இருவர் உயிரிழந்தார்.


 

 
இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
 
நான்குநேரி அருகே உள்ள காரையாண்டி பகுதியை சேர்ந்த பரமசிவம்(32) என்பவர் தனது தோட்டத்தில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
கடந்த 20ஆம் தேதியே வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இன்னும் 3 நாட்களில் மழை தொடங்கும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் இன்றே மழை தொடங்கிவிட்டது.