வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (08:57 IST)

எந்த சிறையிலும் போடுங்கள்; சென்னை வேண்டாம் : போலீசாரிடம் அழுது புலம்பிய ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராம்குமார், தன்னை சென்னையில் உள்ள சிறையில் போட வேண்டாம் என போலீசாரிடம் அழுது மன்றாடியது தெரிய வந்துள்ளது.


 

 
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், செங்க்கோட்டையை ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தன் காதலை ஏற்காததாலும், தன் உருவத்தை பற்றி இழிவாக பேசியதாலும் சுவாதியை கொலை செய்தேன் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
கைது முயற்சியின் போது, தனது கழுத்தை அறுத்துக் கொண்ட ராம்குமாருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் சென்னை கொண்டுவரப்பட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவர் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் போலீசாரிடம் அவ்வப்போது வாக்குமூலம் அளித்து வருகிறார். அப்போது, தன்னிடம் வாக்குமூலம் வாங்கும் போலீஸ் அதிகாரிகளிடம் “ என்னை எங்கு வேண்டுமானாலும் போடுங்க சார்.. ஆனால் சென்னை மட்டும் வேண்டாம்.. எனக்கு அந்த ஊரே பிடிக்கவில்லை..” என்று கூறி ராம்குமார் கதறி அழுது வருகிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.