வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (18:29 IST)

சொத்துகுவிப்பு வழக்கு : திமுக முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்

தி மு க முன்னாள் அமைச்சரும் தற்போதைய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன்,  சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.


 

 
இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
 
இந்த விசாரணையில் கீதா ஜீவன் கணவர் ஜீவன் ஜேக்கப், தந்தை என். பெரியசாமி, எபனேசர் பெரியசாமி, மகன்கள் ராஜா, ஜெகன் ஆகிய 6 பேர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன் நேரில் ஆஜராகினர். 

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்